குரு பெயர்ச்சி பலன்கள் – சிம்மம்

1429

மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் ஜென்ம ராசிக்கு 5, 8-க்கு அதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் ருணரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் திருக்கணிதப்படி வரும் 20-11 2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் பொருளதார ரீதியாக சற்று நெருக்கடிகள் இருந்தாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் யோகம் உண்டு. எதிர்பாராத பிரச்சனைகளை வம்பு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள்.
பொருளாதார ரீதியாக எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பதும் கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவை தரும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும் செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் எதிர் கொண்டு அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வதும், வேலையாட்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் உத்தமம்

உங்கள் ராசிக்கு கேது 4-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அத அனுபவிக்க இடையூறு ஏற்படும். வீடு வாகனங்களை சரிபார்ப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள் என்றாலும் பணி நிமித்தமாக அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நேரத்திற்கு உணவு உண்ண இடையூறு ஏற்படும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி நிம்மதி உண்டாகும். பொதுவாக பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மிகபெரிய செயலை கூட எளிதில் செய்து முடித்து அனுகூலப்பலனைப் பெற முடியும்

உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும் நிலை பண வரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் மேன்மையான பலனை அடையும் யோகம் உண்டாகும்

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். நேரத்தில் உணவு உண்ண இடையூறு ஏற்படும் என்பதால் உங்களது உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளால் நிம்மதி குறையும்

என்றாலும் எதையும் சமாளிக்கும் யோகம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயம் ஏற்படும்

எதிரிகளால் சில இடையூறுகள்
இருந்தாலும் உங்களது திறமையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து எதிர்பாராத தன வரவு ஏற்பட்டு குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் ஏப்ரல் 2021-க்கு பிறகு நல்லது நடக்கும். புத்திரர்களால் சுப செலவு ஏற்படும். அசையா சொத்துகளை புதுபிப்பதற்காக செலவு செய்ய நேரிடும் எதிலும் கவனமாக செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொண்டு கன்னியத்துடன் வாழ முடியும்

கொடுக்கல், வாங்கல்:

பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து வீடுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை

ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச்
செயல்படுவது நல்லது. பிறரை நம்பி
முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம், உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் துறைகளில் எதிர்பார்த்த லாபத்தை அடைய மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தொழில், வியாபாரம்:

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடி இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் சரியான
நேரத்திற்கு வந்து சேரும்
கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டு. போட்டி பொறாமைகளால் மன அமைதி குறையும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கான ஆதாயத்தை அடையும் யோகம் உண்டு. உடன் பணிபுரிபவர்களிடம் உங்களின் குடும்ப விஷயங்களை பகிர்ந்து
கொள்ளாமல் இருப்பது நல்லது நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளும் பிறர் ஏற்படுத்தும்

பிரச்சனைகளால் தாமதப்படும் என்றாலும் தகுந்த நேரத்தில் அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலை அடைய முடியும்

பெண்கள்:

உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே பேச்சில் பொறுமையுடன் இருந்தால் கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி ஏற்படும். உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் ஒரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும் அரசியல்

பொருளாதார நெருக்கடி இருந்தாலும் பெயர், புகழ் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதரின் நட்பு மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும். உடனிருப்பவர்கள் வீண் பிரச்சனைகளை ளை ஏற்படுத்துவார்கள் என்பதால் மற்றவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது எதிர்பாராத நட்புகளால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும் தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறு 160 ஏற்படும்

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் பட்ட பாட்டிற்கு பலனை ஒரு சில தடைக்கு பின்பு அடைந்து விடுவீர்கள். பங்காளிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு மனநிம்மதியினை உண்டாக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும்

கலைஞர்கள்:

கலைஞர்கள் கையிலிருக்கும்
வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொண்டால் சிறு தடைக்கு பின்பு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் இருப்பது நல்லது. வெளியூர்

வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் கிடைக்கும்

மாணவ, மாணவியர்:

கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றிப் பெற முடியும். முடிந்த வரை தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்:

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய் தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு 4-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். பைரவரையும் வணங்கவும். கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை – கிழக்கு

தெய்வம் – சிவன்

- Advertisement -
- Advertisement -