குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்

1646

கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

சாந்தமான குணம் இருந்தாலும், கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11 2020 முதல் 13-11-2021 வரை) பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு நினைத்தவரை கைபிடிக்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்புவதால் கடந்த கால கடன்கள் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகள் சிறப்பாக அமையும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும் உங்களின் பலமும், வலிமையும் கூடும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்கள் வெற்றி பெறும் வெளியூர் மூலம் அனுகூலங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைபட்ட உயர்வுகளை குரு தனது விஷேச பார்வையாக 1, 3, 5 ஆம் வீடுகளை பார்ப்பதால் சிறப்பான ஆரோக்கியம், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்

பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள்

உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன், மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால்

பல்வேறு மேன்மைகளை அடைய முடியும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக 10-ல் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில் தொழில் உத்தியோகத்தில் சிறு, சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும்

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் பலமும் வலிமையும் கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறு, சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகி விடும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலப் பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது

குடும்பம் பொருளாதார நிலை:

குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன், மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை வண்டி, வாகனம் வாங்க முயற்சித்தால் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.


கொடுக்கல், வாங்கல்:

கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளைக் கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற முடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும்

எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் சாதகப்பலன் ஏற்படும். கூட்டாளிகளை மட்டும் சற்று அனுசரித்து செல்வது முக்கிய

முடிவுகள் எடுக்கும் போது அவர்களை கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள். தடைப்பட்ட உயர் பதவிகள் கிடைக்கப்பெற்று கௌரவமான நிலைகள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய

உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்

பெண்கள்:

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மணவயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்கள் யாவும் விலகி கன்னியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் சிலர் அழகான புத்திர செல்வத்தைப் பெற்றெடுப்பர். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்

அரசியல்:

உங்களின் செல்வம் செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கௌரவமிக்க
மாண்புமிகு பதவிகள் கிடைக்கும் மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும் போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தகுந்த நேரத்தில் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பங்காளிகளிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது

கலைஞர்கள்:

புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் எல்லாம் தடையின்றி வந்து சேரும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும்

உடனிருக்கும் நன்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக

இருக்கும். வெளியூர் செல்லக்கூடிய
வாய்ப்பு அமையும்

மாணவ, மாணவியர்:

மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள் நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். உங்களால் உங்கள் பள்ளிக் கல்லூரிகளின் பெயர், புகழ் உயரும்.
பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள் வண்ண மயமான போர்வை

போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8

நிறம் – வெண்மை, நீலம்

கிழமை – வெள்ளி, சனி

கல் – வைரம்

திசை – தென்கிழக்கு

தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி.

- Advertisement -
- Advertisement -