பரணி தீபம் உருவான வரலாறு

2691

ஒரு சமயம் வசிஸ்ரவஸ் முனிவர் ஒரு யாகத் தின் நிறைவில் தானம் கொடுத்துக் கொண்டி ருந்தார். அவர் மகன் நசிகேதன் பல கேள்விக ளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான்.

“தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப் போகிறீர்களா? “

- Advertisement -

“ஆமாம். உன்னை எமனுக்கு தரப்போகிறேன்.”

” தங்கள் உத்தரவு படியே ஆகட்டும் ” என்று கூறி வணங்கி விடைபெற்றான்.

எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்ம னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்று த் திரும்பினான்.

வரும் வழியில் பூலோகத்திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். திருவண்ணாமலை ஈசனிடம் வேண்டினான். அப்போது ஈசன் “கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு எமனுலகு செல்லும் பாதை காண வெளிச்சம் தெரியும். அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன் று சொக்கப்பனை எரித்தால் எமனுலகம் செல்லும் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்ச ம் கிடைக்கும் ” என வாக்குச் தந்தார்.

சிவ பெருமான் வாக்குத் தந்து முதன் முதலில் சொக்கப்பனை எரித்த இடம் திருவண்ணாம லை. அதனால் இப்போதும் திருவண்ணாம லையில் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னி ட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை, மற்றும்
பரணிதீபம் சிறப்பு தகவல்கள்

  1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த் திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
  2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திர த்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
  3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்ப டும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைக ள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்தி ரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
  4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கிய படி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர் கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக் கும் என்பது ஐதீகம்.
  5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
  6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ, நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
  7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் சனி கிழமை (28-ந்தேதி) அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திக ளும் கிரிவலம் வர உள்ளனர்.
  8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக் கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
  9. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
  10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்து க்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
  11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவ ர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
  12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
  13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணிய ங்கள் கிடைக்கும்.
  14. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர த்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம்ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.
  16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.
  17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
  18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை, பரணி தீபம், அண்ணாமலை யார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகை யான தீபங்கள் ஏற்றப்படும்.
  19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
  20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களி ல் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.
  21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியா தவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத் தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்ப து பெரியோர் வாக்கு.
  22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்து
    க்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
  23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
  24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொ ருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
  25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவ ண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்கு ள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

26 திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

  1. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட தும், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன் மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்”- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
  2. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக் குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
- Advertisement -