குரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம்

1479

அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியும் பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11 2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமின்றி உங்கள் ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து தற்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சர்ப்ப கிரகமான ராகு 4 ல் கேது 10-ல் சஞ்சரிப்பதால்

அதிகப்படியான வேலைப்பளுவால் அலைச்சல், உடல் சோர்வு, நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும் பண வரவுகள் சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது

ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும் குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலும் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமலும் இருப்பது உத்தமம். ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆம் வீடுகளை பார்ப்பதால் அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் எதையும் எதிர் கொள்ளும் திறன், உடல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகும் யோகம் உண்டாகும்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு பொருட் தேக்கம் ஏற்படும் அதிக முதலீடு கொண்ட செயல்களில்

எச்சரிக்கையுடன் இருப்பது, அப்படி செய்தே ஆக வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறலாம் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் வேலைப்பளு காரணமாக பணியில் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது

ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ஒரளவுக்கு அனுகூலப்பலனை அடைய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளில் தேவையற்ற இடையூறு ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று சாதகமான பலனை பெற முடியும்

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி
பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்கு பின் உடனே குணமாகும் மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் மருத்துவ காப்பீடு எடுப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மன சஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப வாழ்வில் சிறு, சிறு பிரச்சனைகள் தோன்றும் என்பதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும் திருமண சுபகாரியங்களில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட் சேர்க்கைகளால் உங்களது கை இருப்பு குறையும்

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது உத்தமம். உங்களுக்கு இருக்கும் வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற இயலாது தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கிகள் உண்டாவதால் அவர்களால் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும் கெளரவமான பதவிகளைப் பெற முடியும் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் உங்களின் வேலைப்பளு சற்று குறையும் பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்
செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது

பெண்கள்:

எடுக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்லது கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்க முடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே
அதிகரிக்கும்

அரசியல்:

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் கேவைகளை டர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நேரம் வதந்திகளாலும் மன நிம்மதி குறையும் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்
உழைக்க நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடு படவேண்டி வரும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள் வாய்க்காள் வரப்பு பிரச்சனைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை

கலைஞர்கள்:

எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும்

மாணவ, மாணவியர்:

கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டில் கவனம் தேவை


பரிகாரம்:

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால்

வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை

கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது

உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரய சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லெண்ணெய் தீபமேற்றுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, சனிப்ரீதியாக அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது
உண்டாகும்

உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு-கேதுவுக்கு பரிகாரமாக நவகிரகங்களில் ராகுவுக்கு மந்தாரை மலர்களாலும் கேதுவுக்கு செவ்வல்லி மலர்களாலும் அர்ச்சனை செய்வது நல்லது துர்கையம்மனையும் விநாயகரையும் வழிபடுவது மிகவும் நல்லது

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8

கிழமை – வெள்ளி, சனி

திசை – மேற்கு

கல் – நீலக்கல்,

நிறம் – வெள்ளை, நீலம்

தெய்வம் – ஐயப்பன்

- Advertisement -
- Advertisement -